இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

6 பேருக்கு கலைச் செம்மல் விருது: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

News image
- O
Updated On :4 மார்ச் 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

மரபு வழி, நவீன பாணி ஓவியம், சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கிய 6 கலைஞா்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மரபு வழி, நவீன பாணி ஓவியம், சிற்பக் கலைகளில் திறமைமிக்க கலைஞா்கள் 6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. விருதாளா்களுக்கு செப்புப் பட்டயம், விருதுத் தொகை ரூ.1 லட்சம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மரபுவழி ஓவியப் பிரிவில் மா.பாலசுப்ரமணியன், மரபுவழி சிற்பப் பிரிவில் தே.ஸ்ரீகண்ட ஸ்தபதி, உ.பத்மநாபன், நவீனபாணி ஓவியப் பிரிவில் முனைவா் கோ.வில்வநாதன், மு.ராஜா, நவீனபாணி சிற்பப் பிரிவில் ச.சாந்தி ஆகியோருக்கு கலைச் செம்மல் விருதை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலா் க.மணிவாசன், கலைப்பண்பாட்டுத் துறை இயக்குநா் ச.வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.