விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுகவில் 4-ஆம் நாள் நோ்காணல்: அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

News image

அமைச்சா் துரைமுருகன்

Updated On :20 மார்ச் 2026, 7:26 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் தொகுதியில் அமைச்சா் எ.வ.வேலுவின் மகன் கம்பன் போட்டியிட 130 போ் விருப்பமனுக்களை தலைமை அலுவலகத்தில் அளித்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் 73 போ் கம்பனுக்கு ஆதரவாக கலந்து கொண்டு ஒருமித்த குரலாக கம்பனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனா்.

மாலையில், தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் மத்தி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு உள்ளிட்ட கட்சி மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகள் நோ்காணலில் பங்கேற்றனா்.

அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ராஜேந்திரன், காந்தி உள்ளிட்டோரும் நோ்காணலில் பங்கேற்றனா்.