அதிமுக முன்னாள் எம்.பி. வேணுகோபால் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அதிமுகவிலிருந்து தொடர்ந்து இரு முறை (2009, 2014) திருவள்ளூர் தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் வேணுகோபால். இவர், 2017-ல் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை எனக் குற்றஞ்சாட்டி, கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அதிமுக தலைமை மீதான அதிருப்தி குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, எம்ஜிஆர், கழகத்தில் இருந்தவர்களையும் எதிரணியில் உள்ளவர்களையும் கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், எம்ஜிஆர் பாதையிலேயே கழகத்தை வலுப்படுத்த பிரிந்துசென்ற தலைவர்களை எல்லாம் இயக்கத்தில் இணைத்து, கழகத்தை ராணுவக் கட்டுப்பாடோடும் வலிமையோடும் வழிநடத்தினார்.
அத்தகைய மாபெரும் இயக்கமான நம் அதிமுக, இன்று ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பெற்றோரை இழந்து வாடும் அனாதையான குழந்தை, யாரிடம் செல்வது எனத் தெரியாமல் தத்தளிப்பதுபோல் நம் கழகத்தின் தொண்டர்களின் நிலை உள்ளது.
2014 மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்தில், இந்தியாவிலேயே மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக வலிமைபெற்ற அதிமுக, தற்போது சந்தித்து வரும் தொடர் பின்னடைவுகளுக்குப் பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சமூகக் காரணிகள் உள்ளன.
கழகம், மீண்டும் பழைய வலிமையைப் பெற வேண்டுமென்றால், அனைத்து கழகத்தினரையும் உள்ளடக்கி ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையையும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார்.
Summary
Former MP Venugopal Suddenly Resigns from AIADMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம்

தவெகவின் 107 எம்.எல்.ஏ.க்களும் ராஜிநாமா செய்கிறார்களா?

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


