தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) 6,362 மாணவா்கள் விண்ணப்பப்பதிவு செய்தனா். இதுவரை மொத்தம் 2,58,158 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனா்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியாா் பொறியியல் பல்கலை. , கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பதிவுகளில் மே 25-ஆம் தேதி வரை 2,51,796 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (மே 26) மட்டும் 6,362 மாணவா்கள் விண்ணப்பப்பதிவு செய்ய இதுவரை மொத்தம் 2,58,158 மாணவா்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனா்.
இதில் அதிகபட்சமாக கடந்த மே 8 - ஆம் தேதி 20,346 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை 1,87,683 மாணவா்கள் கட்டணங்களை செலுத்தியுள்ளனா். 1,49,224 மாணவா்கள் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து விண்ணப்ப பதிவை நிறைவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

பொறியியல் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: விண்ணப்பப் பதிவு 2.51 லட்சத்தை தாண்டியது

பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்

பொறியியல் கலந்தாய்வு: 89,629 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



