தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

அடுத்த பிரதமர் யார்? பேரவைக்கு வெளியே வெடித்த வார்த்தைப் போர்!

அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து பேரவைக்கு எம்எல்ஏக்கள் பேசியது குறித்து..

TN Govt to Pass Special Assembly Resolution Against Delimitation Exercise

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)

Published On :2 செப்டம்பர் 2026, 12:33 pm IST

தமிழகத்திலிருந்துதான் அடுத்தப் பிரதமர் உருவாகப் போகிறார் என தவெக எம்எல்ஏ கனிமொழி கூறியதற்கு, பதிலளித்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தாரகை கத்பட், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழக சட்டப்பேரவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 2029 ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் விஜய்தான். 2025-ல் நான் கணித்ததைப் போல 2026-ல் விஜய் முதலமைச்சரானார். 2026-ல் நான் சொல்கிறேன் 2029 ஆண்டில் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார் என்றார்.

மேலும், 2029-ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப் போகிறது. பிரதமரை இனி தில்லியில் இருந்து முடிவு செய்யப் போவது இல்லை.

ராகுல் காந்திதான் தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் ராகுல் காந்தியே தலைவர் தளபதியை பிரதமராக அமர வைப்பார் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என பதிலடி கொடுத்தார்.

அவர் பேசுகையில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய் இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறியுள்ளார். தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்திதான் பிரதமர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எந்த சோர்வும் கிடையாது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இதுநாள்வரை தனித்தனியாக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பிரதமர் வேட்பாளர் குறித்து பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், தலைமைச் செயலகம் வரை வார்த்தைப் போர் வெடித்திருக்கிறது.

Summary

Who will be the next Prime Minister? A war of words erupts outside the assembly!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.