
2029 தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது! பிரதமர் வேட்பாளர் குறித்து அமைச்சர் வெங்கட ரமணன்!
முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்ற கருத்து குறித்து அமைச்சர் வெங்கட ரமணன் விளக்கம்...

வெங்கட் ரமணன் - Dinamani
முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்ற கருத்து தவெக எம்எல்ஏக்களின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் வெங்கட ரமணன் தெரிவித்துள்ளார்.
வரும் 2029 மக்களவைத் தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் என்ற தவெக நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்து விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.
நேற்று கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ், விஜய்தான் அடுத்த பிரதமர் என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் வெங்கடரமணன் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
"இது ஒரு சின்ன கருத்து வேறுபாடுதான். தவெக தலைவர்கள் யாரும் சொல்லவில்லை. அது எம்எல்ஏக்களின் தனிப்பட்ட கருத்துதான். தலைவரும் பொதுச் செயலாளரும் எந்த அமைச்சர்களும் கருத்து சொல்லவில்லை. எம்எல்ஏக்கள் எங்கள் தலைவரின் மீதுள்ள அன்பாலும் ஆசையாலும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிப்பது போல இந்தியா முழுவதும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
2029 க்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. முதல்வருடன் ஆலோசித்து அந்த காலம் வரும்போது முடிவு செய்வார்கள்" என்றார்.
Summary
Minister Venkata Ramanan clarifies the view that CM Joseph Vijay will be the next Prime Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




