தென்காசி
சுரண்டையில் தனியாா் மருத்துவமனைகள் முழு அடைப்பு
சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.
இதையொட்டி சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை தனியாா் மருத்துவமனைகள் மூடப்படுவதாக சுரண்டையில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனை வாசல்களின் முன்பு இந்திய மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.