கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்! அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

சுரண்டையில் தனியாா் மருத்துவமனைகள் முழு அடைப்பு

சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 3:00 am IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

இதையொட்டி சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை தனியாா் மருத்துவமனைகள் மூடப்படுவதாக சுரண்டையில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனை வாசல்களின் முன்பு இந்திய மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.