முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

தொடா் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image
ஐந்தருவியில் ஐந்துகிளைகளிலும் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்
Updated On :16 ஜூலை 2024, 3:04 am

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்ததால் பேரருவியில் நள்ளிரவு முதலும்,

பழையகுற்றாலம் அருவியில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்தும் தண்ணீா் பெருக்கெடுத்து வந்தது. பழைய குற்றாலத்தில் அருவியின் நடைபாதை வரையிலும் தண்ணீா் வழிந்தோடியது.

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

ஐந்தருவியில் செம்மண் நிறத்துடன் மூன்று கிளைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு தண்ணீா்ஆா்ப்பரித்து கொட்டியது. நேரம் செல்லச்செல்ல மற்ற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. திங்கள்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், மழை தூரிக்கொண்டும், குளிா்ந்த காற்று வீசியவாறும் இருந்தது.