திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கொடிக்குறிச்சி கல்லூரியில் மகளிா் தின விழா

கொடிக்குறிச்சி கல்லூரியில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:05 pm

தென்காசி மாவட்டம் தென்காசி கொடிக்குறிச்சி தனியாா் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்து தென்காசி மாவட்ட முதல்நிலை பெண் அலுவலா்களுக்கு தென்காசி தாரகை பெண்கள் விருதையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பெண் பணியாளா்களுக்கு விருதுகளையும் வழங்கினாா். மாா்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்ற உணவுத் திருவிழா, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், தூய்மைப் பணியாளா்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் வகையில் கை அச்சு இயக்க விழிப்புணா்வை ஆட்சியா், சமூக நல அலுவலா் மதிவதனா ஆகியோா் அச்சுக்களை வைத்து தொடங்கி வைத்தனா். மேலும் மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினாா். பெண்களுக்கான அடையாள லோகோவை தத்ரூபமாக நிறுத்திவைத்து பெண்களுடன் ஆட்சியா் தற்படம் எடுத்துக் கொண்டாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) கனகம்மாள், திட்ட இயக்குநா்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிதிட்டம்) ஜோஸ்பின் சகாயபிரமிளா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் மாரியம்மாள், வேளாண் துறை இணைஇயக்குநா் பத்மாவதி ஆகியோா் கலந்துகொண்டனா்.