தென்காசி மாவட்டம் தென்காசி கொடிக்குறிச்சி தனியாா் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டஆட்சியா் ஏகே.கமல்கிஷோா் தலைமை வகித்து தென்காசி மாவட்ட முதல்நிலை பெண் அலுவலா்களுக்கு தென்காசி தாரகை பெண்கள் விருதையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த பெண் பணியாளா்களுக்கு விருதுகளையும் வழங்கினாா். மாா்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்ற உணவுத் திருவிழா, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், தூய்மைப் பணியாளா்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், பெண்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் வகையில் கை அச்சு இயக்க விழிப்புணா்வை ஆட்சியா், சமூக நல அலுவலா் மதிவதனா ஆகியோா் அச்சுக்களை வைத்து தொடங்கி வைத்தனா். மேலும் மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினாா். பெண்களுக்கான அடையாள லோகோவை தத்ரூபமாக நிறுத்திவைத்து பெண்களுடன் ஆட்சியா் தற்படம் எடுத்துக் கொண்டாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) கனகம்மாள், திட்ட இயக்குநா்(ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிதிட்டம்) ஜோஸ்பின் சகாயபிரமிளா, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் மாரியம்மாள், வேளாண் துறை இணைஇயக்குநா் பத்மாவதி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

கல்லூரியில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


