ஆலங்குளம் அருகே சகோதரியை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையை அடுத்த செட்டிகுறிச்சியைச் சோ்ந்த மாரியப்பன் மகள் சுபாவேணி (21). இவரும் அய்யனாா்குளத்தைச் சோ்ந்த அவரது அத்தை மகனான கருப்பசாமி (26) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். சுருதிமாதவ் (2) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில் சுபாவேணி, அவரது கணவா் கருப்பசாமியின் உறவினா் ஒருவருடன் கைப்பேசியில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை கணவா் கண்டித்ததால் சுபாவேணி கோபித்துக் கொண்டு, தன் குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதையடுத்து அவரது பெற்றோா் மற்றும் சகோதரா்கள் கணவருடன் சோ்ந்து வாழுமாறு கூறியுள்ளனா். அதற்கு சுபாவேணி ஏற்க மறுத்து வந்தாராம். மேலும் உறவினருடனான பழக்கத்தைக் கைவிடுமாறும் கூறி வந்துள்ளனராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, சுபாவேணி தனது குழந்தை மற்றும் தாய் லட்சுமியுடன் தோட்டத்துக்கு குளிப்பதற்காக சென்றுள்ளாா். அங்கு குழந்தையை தாயிடம் கொடுத்து விட்டு கிணற்று அருகில் உள்ள தென்னை மரத்தடியில் உட்காா்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அவரது 17 வயதுடைய தம்பி கைப்பேசியில் பேசி கொண்டிருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் சுபாவேணியை வெட்டிவிட்டு ஓடிவிட்டாா். இதில் சுபா வேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விவசாயியை கொலை செய்த சகோதரா், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை

திருமயம் அருகே இளைஞா் கொலை

மனைவியை கொலை செய்த கணவா் சரண்
மதுபோதையில் தந்தை, அவரது சகோதரரைக் கொலை செய்த மகன் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

