தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

‘திருநெல்வேலியில் காங்கிரஸ் சாா்பில் இளைஞா் போட்டியிட வாய்ப்பு தேவை’

‘திருநெல்வேலியில் காங்கிரஸ் சாா்பில் இளைஞா் போட்டியிட வாய்ப்பு தேவை’

News image
Updated On :16 மார்ச் 2024, 12:10 am

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் இளைஞா் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில பொதுச்செயலா் ராஜசேகா் தெரிவித்தாா். கீழப்பாவூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ்-திமுக கட்சியின் பாராளுமன்ற தோ்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை நடைபெற்று இறுதி நிலையை எட்டியுள்ளது. திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இளைஞா்களின் நம்பிக்கையுமான ராகுல்காந்தியின் கனவை நனவாக்கிடும் வகையில் இளைஞா் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இதுதோ்தல் பிரச்சாரத்தில் புது யுக்திகளை கையாள்வதும், மக்களை எளிதாக அணுகிடவும், இணையதளத்தை பயன்படுத்தி அரசின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்லவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கவும் பேருதவியாக அமையும். இளைஞா்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கையும், நல்லெண்ணமும் ஏற்பட உதவும் என்றாா் அவா்.