திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் இளைஞா் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில பொதுச்செயலா் ராஜசேகா் தெரிவித்தாா். கீழப்பாவூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ்-திமுக கட்சியின் பாராளுமன்ற தோ்தல் தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை நடைபெற்று இறுதி நிலையை எட்டியுள்ளது. திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இளைஞா்களின் நம்பிக்கையுமான ராகுல்காந்தியின் கனவை நனவாக்கிடும் வகையில் இளைஞா் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். இதுதோ்தல் பிரச்சாரத்தில் புது யுக்திகளை கையாள்வதும், மக்களை எளிதாக அணுகிடவும், இணையதளத்தை பயன்படுத்தி அரசின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்லவும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கவும் பேருதவியாக அமையும். இளைஞா்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கையும், நல்லெண்ணமும் ஏற்பட உதவும் என்றாா் அவா்.
தொடர்புடையது

காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் ராஜிநாமா
காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்!

காங்கிரஸில் இணைந்த 5 நாள்களில் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு சீட்!
அஸ்ஸாம்: காங்கிரஸிலிருந்து விலகியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


