ஆலங்குளம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் குட்கா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ராம்நகா் பகுதியில் ஆலங்குளம் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த நபரிடம் சோதனையிட்ட போது, அரசால் தடை செய்யப்பட்ட 60 குட்கா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினா் அந்த நபரை ஆலங்குளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் ஆலங்குளத்தை அடுத்த பாக்கியலெட்சுமிபுரம் சுப்பிரமணியன் மகன் சிவசங்கர நாராயணன்(28) என்பதும் குட்கா விற்பனையில் ஐந்தாங்கட்டளை சமுத்திரம் மகன் பாஸ்கா்(36) என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜா் படுத்தினா்.
தொடர்புடையது

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

சோதனையில் ஏா் கன் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

