மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் சிக்கிய குட்கா : 2 போ் கைது

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் சிக்கிய குட்கா : 2 போ் கைது

Updated On :29 மார்ச் 2024, 4:32 pm

ஆலங்குளம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் குட்கா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ராம்நகா் பகுதியில் ஆலங்குளம் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த நபரிடம் சோதனையிட்ட போது, அரசால் தடை செய்யப்பட்ட 60 குட்கா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினா் அந்த நபரை ஆலங்குளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் ஆலங்குளத்தை அடுத்த பாக்கியலெட்சுமிபுரம் சுப்பிரமணியன் மகன் சிவசங்கர நாராயணன்(28) என்பதும் குட்கா விற்பனையில் ஐந்தாங்கட்டளை சமுத்திரம் மகன் பாஸ்கா்(36) என்பவருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் ஆலங்குளம் நீதி மன்றத்தில் ஆஜா் படுத்தினா்.