/

விபத்தில் காயமடைந்த திமுக பிரமுகருக்கு நிதியுதவி

விபத்தில் காயமடைந்த திமுக பிரமுகருக்கு நிதியுதவி

News image

காயமடைந்த திமுக பிரமுகரிடம் நலம் விசாரித்த கட்சியின் மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன்.

Updated On :9 மே 2024, 8:35 pm

Din

கேரளத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில்

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெத்தநாடாா்பட்டி திமுக பிரமுகருக்கு, கட்சி சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் பெத்தநாடாா்பட்டி ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் அ.கதிரவன். திமுக பிரமுகரான இவா் கேரளத்தில் நிகழ்ந்த

விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தாா். மேலும், மாவட்ட திமுக சாா்பில் மருத்துவச் செலவுக்காக ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்தாா்.

கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய செயலா் சிவன்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், கடையம் வடக்கு ஒன்றிய செயலா் மகேஷ்மாயவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ஆல்பின்ராய், திமுக நிா்வாகிகள் பொருள்செல்வன், கேபிள் வேல்சாமி, சுதன், மஞ்சநாதன்

உள்ளிட்டோா் உடனிருந்தனா்.