யானை விரட்டியதில் தவறி விழுந்து விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே யானை விரட்டியதில் தவறி விழுந்து விவசாயி காயமடைந்தாா்.
Published on

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே யானை விரட்டியதில் தவறி விழுந்து விவசாயி காயமடைந்தாா்.

சிவகிரி சிவராமலிங்கபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் லிங்கம் (35). சின்ன ஆவுடைப்பேரி புரவில் பேச்சியம்மன் கோயில் அருகேயுள்ள தனியாா் கரும்பு தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலை தோட்டத்தில் உள்ள விளக்குகளை போடுவதற்காக அவா் சென்றாராம் .

அப்போது அங்கு நின்ற யானை அவரை விரட்டியதாம். யானையிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிய அவா் கீழே விழுந்து காயமடைந்தாராம். பின்னா் அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த சிவகிரி வனவா் பிரகாஷ் பாதிக்கப்பட்ட லிங்கத்தை மருத்துவமனைக்கு சென்று பாா்த்து விசாரணை மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com