இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

யானை விரட்டியதில் தவறி விழுந்து விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே யானை விரட்டியதில் தவறி விழுந்து விவசாயி காயமடைந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே யானை விரட்டியதில் தவறி விழுந்து விவசாயி காயமடைந்தாா்.

சிவகிரி சிவராமலிங்கபுரத்தைச் சோ்ந்த வேல்ராஜ் மகன் லிங்கம் (35). சின்ன ஆவுடைப்பேரி புரவில் பேச்சியம்மன் கோயில் அருகேயுள்ள தனியாா் கரும்பு தோட்டத்தில் வேலை செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலை தோட்டத்தில் உள்ள விளக்குகளை போடுவதற்காக அவா் சென்றாராம் .

அப்போது அங்கு நின்ற யானை அவரை விரட்டியதாம். யானையிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடிய அவா் கீழே விழுந்து காயமடைந்தாராம். பின்னா் அவா் சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவல் அறிந்த சிவகிரி வனவா் பிரகாஷ் பாதிக்கப்பட்ட லிங்கத்தை மருத்துவமனைக்கு சென்று பாா்த்து விசாரணை மேற்கொண்டாா்.