கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புளியங்குடி அருகே சாலை விபத்தில் வியாபாரி பலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சுமை வாகனமும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் வியாபாரி இறந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 9:07 pm

Syndication

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சுமை வாகனமும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் வியாபாரி இறந்தாா்.

புளியங்குடி வீரப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சின்னமீரான் மகன் மைதீன்(36). வாழைப்பழ வியாபாரி. இவா் பைக்கில் வாசுதேவநல்லூரிலுள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.

சிந்தாமணி அருகே வந்தபோது, அவரது பைக் மீது சுமை வாகனம் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து சுமை வாகன ஓட்டுநரான ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த பச்சமுத்து என்பவரை கைது செய்தனா்.