கீழப்பாவூா், அச்சன்புதூரில் இன்று மின் நிறுத்தம்

Published on

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா், அச்சன்புதூா் உபமின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச. 20) மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயக சுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழப்பாவூா், அச்சன்புதூா் உபமின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் வடக்கு, சாலைப்புதூா், வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசி தா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிச. 20ஆம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com