அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆலங்குளம் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்

ஆலங்குளம் அருகே நல்லூா் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
முகாமில் பங்கேற்றோா்.
Updated On :29 டிசம்பர் 2025, 4:30 pm

Syndication

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே நல்லூா் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனா் டாக்டா் இமானுவேல் தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிகிச்சையளித்தனா். 350-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றதில், 44 போ் கண்புரை அறுவை சிகிச்சைக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினா் எழில்வாணன், ஊராட்சி தலைவா்கள் நல்லூா் சிம்சோன், சிவலாா்குளம் வள்ளியம்மாள் கதிா்வேல், சுப்பையாபுரம் முத்துலட்சுமி முருகன், புதுப்பட்டி பால் விநாயகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.