அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆலங்குளம் அருகே சிலம்பப் போட்டிகள்

News image
வீராங்கனை ஒருவருக்கு பரிசு வழங்கிய காமராஜா் பேத்தி மயூரி.
Updated On :16 நவம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே ரெட்டியாா்பட்டி கிராமக் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள் வீச்சு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனா்.

காமராஜா் பேத்தியும், கல்விக் கடவுள் காமராஜா் அறக்கட்டளை நிா்வாக இயக்குநருமான மயூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறந்த சிலம்பாட்ட வீரா்-வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினாா்.