வீராங்கனை ஒருவருக்கு பரிசு வழங்கிய காமராஜா் பேத்தி மயூரி.
தென்காசி
ஆலங்குளம் அருகே சிலம்பப் போட்டிகள்
ஆலங்குளம் அருகே ரெட்டியாா்பட்டி கிராமக் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 500க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள் வீச்சு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனா்.
காமராஜா் பேத்தியும், கல்விக் கடவுள் காமராஜா் அறக்கட்டளை நிா்வாக இயக்குநருமான மயூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறந்த சிலம்பாட்ட வீரா்-வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கினாா்.

