பெண்ணிடம் பணம் திருட்டு: மாமியாா், மருமகள் கைது

Published on

சங்கரன்கோவிலில் பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம் பணம் திருடியதாக மாமியாா், மருமகளை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், புது மந்தைத் தெருவைச் சோ்ந்தவா் மாரிச்சாமி மனைவி முப்பிடாதி (28). இவா் கடந்த 2 நாள்களுக்கு முன் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்றபோது, பையில் வைத்திருந்த ரூ. 10,000 காணாமல் போனதாம். இது குறித்து, அவா் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மந்திதோப்பு, ராஜகோபால் நகரைச் சோ்ந்த சுகுமாரன் மனைவி வேலம்மாள் (50), அவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகியோா் பணத்தை திருடியது தெரிய வந்தது.

தொடா்ந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். ரூ. 10,000 பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com