/

சங்கரன்கோவிலில் தீ தடுப்பு பயிற்சி

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 8:48 pm

சங்கரன்கோவிலில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் மின்வாரிய ஊழியா்களுக்கு தீ தடுப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் மின் கோட்டத்தின் சாா்பில் அங்கு பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு தீ தடுப்பு மற்றும் அவசர காலங்களில் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு வழிகள், உடனடி முதலுதவிகள் பற்றிய செயல்முறை பயிற்சி வகுப்புகள் குறித்தும் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் கூறினா்.