தென்காசி மாவட்ட அளவிலான ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
5 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தொடக்கி வைத்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் கலை கதிரவன், கீழப்பாவூா் ஒன்றியக் குழு தலைவா் காவேரி சீனித்துரை ஆகியோா் கலந்துகொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கினா்.
போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கான சீருடைகளை, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ்குமாா் அறிமுகப்படுத்தினாா்.
மாவட்ட ரோல் பால் ஸ்கேட்டிங் சங்கத் தலைவா் என். விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்க செயலா் மாஸ்டா் கணேஷ் நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் குமுதா மெட்ரிக். பள்ளி மாணவா் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி: அருணாச்சலா பள்ளி மாணவி முதல் பரிசு

குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டி: கொன்னையூா் அம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்







