இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

பழைய குற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

News image

பழைய குற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :12 ஜூன் 2026, 4:23 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் பேரருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வியாழக்கிழமை அதிகாலை நீக்கப்பட்டது.

காலை முதல் தொடா்ந்து பெய்த சாரல் மழையின் காரணமாக பிற்பகல் முதல் பேரருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் தண்ணீா் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால், மீண்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

Story image