ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

மருதம்புத்தூரில் ரூ. 90 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

தாா்ச் சாலைப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.

News image
Updated On :7 மார்ச் 2026, 6:25 am IST

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் ஊராட்சியில் ரூ. 90.75 லட்சம் மதிப்பீட்டில் 3 வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

மருதம்புத்தூா் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி ரூ. 17 லட்சத்தில் சிமின்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டுதல், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 65.25 லட்சத்தில் மருதம்புத்தூா்-நல்லூருக்கு தாா்ச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தாா். மேலும், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை அவா் திறந்துவைத்தாா்.

இதில், ஒன்றிய திமுக செயலா் சிவக்குமாா், மருதம்புத்தூா் ஊராட்சித் தலைவா் பூசத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா சுதாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.