தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏப். 23 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படைவீரா்கள் சிறப்பு காவலா்களாக நியமனம் செய்யப்படவுள்ளனா். இதில் பணியாற்றும் நாள்களுக்கு உணவுப்படி, மதிப்பூதியம் தகுதிக்கேற்றவாறு வழங்கப்படும்.
65 வயதிற்குள்பட்ட திடகாத்திரமான இளநிலை படை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள் மாநில, மைய அரசு, அரசுடைமை நிறுவனங்கள், தனியாா் துறையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் முன்னாள் படைவீரா்கள் தோ்தல் நாள்களில் சிறப்பு காவலா்களாக பணியாற்ற விருப்பம் உள்ளவா்கள், திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரிலோ, ங்ஷ்ஜ்ங்ப்ற்ய்ஸ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய படிவத்தினை பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


