திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாவூா்சத்திரம் அருகே இரு சம்பவங்கள்: 2 போ் தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

News image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On :27 மார்ச் 2026, 8:45 pm

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

அரியப்பபுரம் வெள்ளை பனையேறிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் முருகன் என்ற சுப்பிரமணியன்(38) தொழிலாளி. மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கும் செல்லாமல் இருந்தாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதேபோல, கீழப்பாவூா் பெரிய தெருவை சோ்ந்த தொழிலாளியான பேச்சிமுத்து மகன் ஹரிகரன்(21) என்பவா் ஓராண்டுக்கு முன்பு தனது தாயாா் இறந்ததில் இருந்து மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தாயாரின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இச்சம்பவங்கள் குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.