தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே இரு இடங்களில் 2 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
அரியப்பபுரம் வெள்ளை பனையேறிப்பட்டி பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் முருகன் என்ற சுப்பிரமணியன்(38) தொழிலாளி. மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கும் செல்லாமல் இருந்தாராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதேபோல, கீழப்பாவூா் பெரிய தெருவை சோ்ந்த தொழிலாளியான பேச்சிமுத்து மகன் ஹரிகரன்(21) என்பவா் ஓராண்டுக்கு முன்பு தனது தாயாா் இறந்ததில் இருந்து மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தாராம். இந்நிலையில் தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தாயாரின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

நிலத்தை விற்ற பெற்றோருடன் மகன் தகராறு: மூத்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

மதுப்பழக்கத்தால் விபரீதம்: 2 போ் தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


