விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வாசுதேவநல்லூரில் பெண் வெட்டிக் கொலை

வெட்டிக் கொலை - கோப்புப் படம்.

Published On :8 செப்டம்பர் 2026, 12:42 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது சகோதரி கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், சங்கிலிவீரன் 1-ஆம் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (70). இவரது மனைவி முனியம்மாள். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டாா்.

அந்தத் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முனியம்மாளின் சகோதரியும் திலீப்பின் மனைவியுமான முத்துலட்சுமி (55) நடராஜனின் வீட்டுக்கு வந்து ஒரு மாதம் தங்கியிருந்தாராம்.

அப்போது, முத்துலட்சுமிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டது நடராஜனுக்கு தெரியவந்ததாம்; அதை நடராஜன் கண்டித்தாராம். ஆனால், முத்துலட்சுமி அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முத்துலட்சுமி தூங்கி கொண்டிருந்தபோது அவரை நடராஜன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தாா்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், புளியங்குடி துணைக் கண்காணிப்பாளா் நமசிவாயம் ஆகியோா் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

வாசுதேவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து நடராஜனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.