ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தேஜஸ் விரைவு ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ஞானதிரவியம் எம்.பி. கோரிக்கை

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:46 am IST

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு போதிய ரயில் வசதிகள் இல்லாததால் தொழில்துறையில் பின்தங்கியுள்ளதோடு, வேலைவாய்ப்பும் குறைவாகவே உள்ளது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கானோா் சென்னை-திருநெல்வேலி இடையே பயணித்து வருகிறாா்கள். தென்தமிழகம் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப ரயில் சேவைகள் அதிகப்படுத்தப்படவில்லை. பிரீமியா் குளிா்சாதன வசதி கொண்ட ரயில், ராஜதானி, சதாப்தி, ஜன்சதாப்தி, டபுள்டக்கா், கரீப் ரத் உள்ளிட்ட எந்த ரயில் வசதிகளும் மதுரைக்கு தெற்கே கிடைக்கவில்லை.

ஆகவே, சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இதேபோல சென்னையில் இருந்து எா்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் விரைவு ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயும், மக்களுக்கு நன்மையும் கிடைக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.