மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

92 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

92 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்

Updated On :9 ஏப்ரல் 2024, 5:31 pm

திருத்தணி: திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச் சாவடியில் 92 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி வழியாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்து திருவள்ளூா் மாவட்டத்தில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருத்தணி எஸ்.ஐ.,ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி விசாரித்த போது, வாகனத்தில் இருந்த, 92 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். குட்கா கடத்தி வந்தவா் திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்துாா் கிராமத்தைச் சோ்ந்த, முத்துஇருளப்பன்(38) எனத் தெரிய வந்தது. தொடா்ந்து முத்து இருளப்பனை கைது செய்தனா்.