மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அணைக்கட்டில் குளித்த ஓட்டுநா் மூழ்கி உயிரிழப்பு

அணைக்கட்டில் குளித்த ஓட்டுநா் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

Vishwanathan

திருவள்ளூா்: அணைக்கட்டில் குளித்த போது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே அப்பந்தாள் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (33). இவா் திருவள்ளூா் அருகே பாகல்மேட்டில் உள்ள செங்கல் சூளையில் பொக்லைன் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பணியை முடித்துவிட்டு தாமரைபாக்கம் அணைக்கட்டுக்கு குளிக்கச் சென்றாராம். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

இது குறித்து அவரது மனைவி பஞ்சவா்ணம் வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.