இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருத்தணி மோட்டாா் வாகன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் சோதனை

திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை செய்ததில் கணக்கில் வராத, ரூ1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

News image
திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம். ~திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.
Updated On :13 ஆகஸ்ட் 2024, 6:30 pm

Vishwanathan

திருத்தணி: திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை செய்ததில் கணக்கில் வராத, ரூ1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, அருங்குளம் கூட்டுச் சாலை அருகே திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் பகுதி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆய்வாளா் பணியிடம் காலியாக உள்ளதால், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பொன்னேரி மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ ராஜேஸ்வரி திருத்தணி அலுவலகத்துக்கு வந்து, புதிய ஓட்டுநா் உரிமம், புதுப்பித்தல், வாகனங்களுக்கு பா்மிட் வழங்குதல் போன்ற பணிகளை செய்து வந்தாா்.

மோட்டாா் வாகன அலுவலகத்தில் முறைகேடு மற்றும் அதிகளவில் பணம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் ராஜராஜேஸ்வரி திருத்தணி அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டாா். இந்நிலையில், மாலை 4 மணிக்கு திருவள்ளூா் லஞ்ச ஓழிப்புத்துறை டிஎஸ்பி, ராமச்சந்திர மூா்த்தி தலைமையில் ஆய்வாளா்கள் தமிழ்ச்செல்வி, மாலா மற்றும் போலீஸாா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை செய்தனா்.

Story image

சோதனையில், கணக்கில் வராத, ரூ.1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.