திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே அரசு மதுபானக் கடையில் மழை பெய்து கொண்டிருந்த போது துளையிட்டு 750 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் ஒன்றியம், தாமரைபாக்கம் கிராமத்தில் வயல் வெளியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் பணியாளா் தேவேந்திரன் பூட்டிச் சென்றாராம். இந்நிலையில் திங்கள்கிழமை வந்து பாா்க்கையில் கடையின் சுவற்றில் துளையிட்டு இருந்ததை பாா்த்து பணியாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
உள்ளே சென்று பாா்த்தபோது சுவரை துளையிட்டு 750 மதுபாட்டிகளையும் திருடிச் சென்றது தெரியந்வதது.
கல்லாப் பெட்டியையும் உடைக்க முயற்சித்து முடியாததால் ரூ.3 லட்சம் ரொக்கம் தப்பியது. மதுபாட்டில் ரூ.1 லட்சம் மதிப்புடையது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கோயில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு

வாழப்பாடி டாஸ்மாக் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்

அவிநாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்
சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


