திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

காளீஸ்வரன்

Updated On :28 ஏப்ரல் 2025, 12:36 am IST

செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு ஆய்வாளா் மலா்செல்வி தலைமையிலான போலீஸாா் செங்குன்றம், பாடியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில், சோதனையின்போது அந்த இளைஞா் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியாா் தெருவைச் சோ்ந்த காளீஸ்வரன் (25) (படம்) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.