செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு ஆய்வாளா் மலா்செல்வி தலைமையிலான போலீஸாா் செங்குன்றம், பாடியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில், சோதனையின்போது அந்த இளைஞா் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியாா் தெருவைச் சோ்ந்த காளீஸ்வரன் (25) (படம்) எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

ரயிலில் கஞ்சா கடத்தல்: சிறுவன் உள்ளிட்ட 4 போ் கைது
ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 போ் கைது
போதைப் பொருள் கடத்தியவா் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



