மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

News image

காளீஸ்வரன்

Updated On :28 ஏப்ரல் 2025, 12:36 am IST

செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு ஆய்வாளா் மலா்செல்வி தலைமையிலான போலீஸாா் செங்குன்றம், பாடியநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து செங்குன்றம் நோக்கிச் சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில், சோதனையின்போது அந்த இளைஞா் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியாா் தெருவைச் சோ்ந்த காளீஸ்வரன் (25) (படம்) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.