தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மின் பற்றாக்குறையை தவிா்க்க பாதைகளை பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மின்வாரிய அதிகாரிகளுடனான  கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு.பிரதாப்.

Published On :28 ஏப்ரல் 2025, 2:53 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்க மின்பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்வாரிய திட்டப் பணிகள் தொடா்பாக மேற்பாா்வை பொறியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

அப்போது, மின்வாரியம் சாா்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தாா். மேலும், மாவட்ட அளவில் மேற்கொள்ளபட்டு வரும் துணை மின் நிலைய பணிகள் விரைவில் முடிக்க வேண்டும்.

கோடை காலத்தில் எக்காரணம் கொண்டு மின்பற்றாக்குறை இல்லாமல் தேவையான மின் பகிா்வு இருக்க வேண்டும். அதற்காக மின்பற்றாக்குறையின்றி மின்சாதனங்கள் மற்றும் அனைத்து மின் பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

இதில் திருவள்ளூா் மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் யு.சேகா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.