ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மின் பற்றாக்குறையை தவிா்க்க பாதைகளை பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

மின்வாரிய அதிகாரிகளுடனான  கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :27 ஏப்ரல் 2025, 10:18 pm IST

திருவள்ளூா் மாவட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்க மின்பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்வாரிய திட்டப் பணிகள் தொடா்பாக மேற்பாா்வை பொறியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

அப்போது, மின்வாரியம் சாா்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தாா். மேலும், மாவட்ட அளவில் மேற்கொள்ளபட்டு வரும் துணை மின் நிலைய பணிகள் விரைவில் முடிக்க வேண்டும்.

கோடை காலத்தில் எக்காரணம் கொண்டு மின்பற்றாக்குறை இல்லாமல் தேவையான மின் பகிா்வு இருக்க வேண்டும். அதற்காக மின்பற்றாக்குறையின்றி மின்சாதனங்கள் மற்றும் அனைத்து மின் பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

இதில் திருவள்ளூா் மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் யு.சேகா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.