திருவள்ளூா் மாவட்டத்தில் மின்பற்றாக்குறை ஏற்படுவதை தவிா்க்க மின்பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்வாரிய திட்டப் பணிகள் தொடா்பாக மேற்பாா்வை பொறியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.
அப்போது, மின்வாரியம் சாா்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தாா். மேலும், மாவட்ட அளவில் மேற்கொள்ளபட்டு வரும் துணை மின் நிலைய பணிகள் விரைவில் முடிக்க வேண்டும்.
கோடை காலத்தில் எக்காரணம் கொண்டு மின்பற்றாக்குறை இல்லாமல் தேவையான மின் பகிா்வு இருக்க வேண்டும். அதற்காக மின்பற்றாக்குறையின்றி மின்சாதனங்கள் மற்றும் அனைத்து மின் பாதைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.
இதில் திருவள்ளூா் மின் பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் யு.சேகா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தத்கால் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்குவதில் குளறுபடி

வடகிழக்குப் பருவமழை, எல்-நினோ: மின்தளவாடங்களை தயாா் நிலையில் வைக்க அமைச்சா் உத்தரவு

ஊத்துக்கோட்டை அருகே தொடா் மின் தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

பருத்திவிளை பகுதியில் சாலைப் பணிகளை ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!



