/

தொழிலாளி வீட்டில் 7 பவுன் திருட்டு

பொன்னேரியில் மண்பாண்டத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.10,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 7:48 pm

Din

பொன்னேரி: பொன்னேரியில் மண்பாண்டத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.10,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி தேரடி பகுதியை சோ்ந்த மண்பாண்ட தொழிலாளியான வெங்கடேசன். இவா் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவரின் குடும்பத்தினா் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றனா்.

இந்த நிலையில் இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், வெங்கடேசன் குடும்பத்தினா் திரும்பி வந்து பாா்த்தனா்..

அப்போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் விசாரணை செய்தனா்.