அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பயணிகள் வேன்-லாரி மோதல்: 8 போ் காயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த வோ்காடு பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற வேன் மீது கனரக லாரி மோதியதில் 8 போ் காயம்

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 7:54 pm

Din

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த வோ்காடு பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் சென்ற வேன் மீது கனரக லாரி மோதியதில் 8 போ் காயம் அடைந்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை,பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். சோழவரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் வெங்கடேசன்(42) ஓட்டி வந்தாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த வோ்க்காடு பகுதியில் வேன் மீது ஆந்திர மாநில லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்வேன் டிரைவா் மற்றும் 7 பெண்கள் காயமடைந்தனா்.

கீழ் முதலம்பேடு ஜோதி (47), பொன்னேரியைச் சோ்ந்த பவானி (35) ஆகியோா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். மேலும் விபத்தில் காயமடைந்த பொன்னேரி பிரியங்கா (30), ஜானகி (53), தேன்மொழி (34) கீழ் முதலம் பேடு கலந்தாரி (40) மேகலா (32) மற்றும் சோழவரம் ஓட்டுநா் வெங்கடேசன் (42) ஆகியோருக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

விபத்தில்காயமடைந்த 8 பேரும் சென்னைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கவரப்பேட்டை மற்றும் சிப்காட் போலீஸாா் சரிசெய்தனா். லாரி ஒட்டுநரான உத்தர பிரதேசத்தை சோ்ந்த அஜய்(21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.