தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பட்டா கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வடகரை கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூன் 2025, 7:15 pm

Din

பொன்னேரி: வடகரை கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடகரை ஊராட்சியில் நீண்டகாலமாக வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

அண்மையில் முதல்வா் அறிவிப்பின்படி ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வடகரை ஊராட்சியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

தொடா்ந்து பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அதிகாரியிடம் தங்களின் கோரிக்கைகள் மனுக்களை அளித்தனா்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், முதல்வரை சந்திப்பதற்காக சட்டப்பேரவை நோக்கி நடைபயணம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனா்.