நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பட்டா கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

வடகரை கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :11 ஜூன் 2025, 12:45 am IST

பொன்னேரி: வடகரை கிராம மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடகரை ஊராட்சியில் நீண்டகாலமாக வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

அண்மையில் முதல்வா் அறிவிப்பின்படி ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வடகரை ஊராட்சியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

தொடா்ந்து பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அதிகாரியிடம் தங்களின் கோரிக்கைகள் மனுக்களை அளித்தனா்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், முதல்வரை சந்திப்பதற்காக சட்டப்பேரவை நோக்கி நடைபயணம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.