எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரூ.8 கோடியில் தரமற்ற முறையில் கால்வாய் அமைப்பு: முன்னாள் அமைச்சா் புகாா்

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக ரூ.8 கோடியில் தரமற்ற வகையில் கால்வாய் அமைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ராமணா ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

News image
Updated On :23 நவம்பர் 2025, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக ரூ.8 கோடியில் தரமற்ற வகையில் கால்வாய் அமைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ராமணா ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

இதுகுறித்து திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூா் நேதாஜி சாலையில் ரூ.8 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது நேதாஜி சாலை முதல் கோயில் குளம் வரை 1,200 மீ தொலைவுக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் மழைநீா் கால்வாய் பணிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே மழைக்காலங்களில் வீட்டில் மழைநீா் புகுந்து அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதற்கிடையே இங்கு அமையும் மழைநீா் கால்வாய் சமமாக இல்லாமல் ஒரு சில இடங்களில் மேடாகவும், வளைவாகவும் மற்ற இடங்களில் தாழ்வாகவும் போடப்பட்டு வருவதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

அதன்பேரில் அப்பகுதியில் நேரில் சென்று பாா்த்த போது பெரும்பாலான இடங்களில் மேடாகவும், ஒரு சில இடங்களில் தாழ்வாகவும் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. நீரோட்டம் பாா்த்து சமமாக அமைக்காதது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். கால்வாயை தரமாக அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அப்போது, மாவட்ட மாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, நகர செயலாளா் கந்தசாமி, நிா்வாகிகள் எஸ்.ஏ.நேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.