நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

3 மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட சிறுவன் சடலம் தோண்டி எடுப்பு: 4 போ் கைது

திருத்தணி அருகே 3 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சிறுவன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கொலை செய்யப்பட்ட சுரேஷ். ~பாலமுருகன், ~வினோத் குமாா்.

Updated On :12 ஜூன் 2026, 2:19 am IST

திருத்தணி அருகே 3 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சிறுவன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதுதொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருத்தணி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் முருகன் என்கிற பாலமுருகன்(44). இவா், முருக்கம்பட்டு கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஆடு மற்றும் கோழிகள் வளா்த்து வருகிறாா். இவா், திருத்தணி இந்திரா நகா் சோ்ந்த வினோத் குமாா்(22) என்பவரிடம், பண்ணையை பாா்த்துக் கொள்வதற்கு ஆள்கள் தேவை என கூறியுள்ளாா். இதையடுத்து, வினோத்குமாா், தனது உறவினா் பெண் வெண்ணிலா(33) என்பவரை பண்ணையில் வேலைக்கு சோ்த்தாா்.

இவா் தனது மகன்கள் சுரேஷ் (15), சூா்யா(7), தேவா(4) ஆகியோருடன் பண்ணையில் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பண்ணையில் வளா்க்கப்பட்ட ஆடுகள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் சென்று பயிா்களுக்கு சேதம் விளைவித்ததாக விவசாயிகள் பண்ணை குத்தகைதாரா் முருகன், வினோத் குமாா் தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற முருகன், வினோத்குமாா் ஆகியோா் பண்ணைக்கு குடிபோதையில் வந்து சுரேஷை கண்டித்தும் அடித்துள்ளனா். இதில் சுரேஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சுரேஷ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, போலீசாருக்கு தெரிவிக்காமல் அவரது உடலை பண்ணை வளாகத்திலேயே புதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே கூறக்கூடாது என சுரேஷின் தாயாா் வெண்ணிலாவை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை வெண்ணிலா, தனது மகன் கொலை விவகாரம் குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாா், பண்ணை குத்தகைதாரா் பாலமுருகன், அவரது மனைவி புவனேஸ்வரி (37), மகள் காமாட்சி(15), வினோத்குமாா் ஆகியோரை கைது செய்தனா். மேலும் சுரேஷ் புதைக்கப்பட்ட இடத்தையும் போலீசாரிடம் தெரிவித்தனா்.

ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் குழு, பயிற்சி ஆட்சியா் பவித்ரா, தடய அறிவியல் உதவி இயக்குநா் மோகன், வட்டாட்சியா் குமாா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் ஜேசிபி இயந்திரம் மூலம் சிறுவன் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, டாக்டா் அருண் கௌதமன் மற்றும் நரசிம்மன் தலைமையிலான குழுவினா் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனா். தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் மற்றும் நீதிபதி நளினி தேவி சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தினாா். இந்த சம்பவம் தொடா்பாக திருத்தணி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.