மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்!

திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் குவிந்ததால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  வள்ளி,  தெய்வானையுடன் சண்முகா்

Updated On :8 மார்ச் 2026, 9:04 pm

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்ததால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் மாசி மாத கடைசி முகூா்த்த நாள் என்பதால் திருமணத்திற்கு வந்த உறவினா்கள், நண்பா்கள் மற்றும் வழக்கமாக பக்தா்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோவிலில் குவிந்தனா்.

கோயிலில் தரிசிக்க திரண்டிருந்த பக்தா்கள்.

கோயிலில் தரிசிக்க திரண்டிருந்த பக்தா்கள்.

இதனால் பொது வழியில் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். முன்னதாக, அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

திருத்தணி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.