கும்மிடிப்பூண்டி அருகே பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கரடிப்புத்தூரை சோ்ந்த நாராயணன் மகன் லத்தீஷ் (15) பாலவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் பொதுத்தோ்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தோ்வில் லத்தீஷ் தோ்ச்சி பெறவில்லை. இதனால் வேதனையில் இருந்த லத்தீஷ் வீட்டில் இருந்து வெளியே சென்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளாா். லத்தீஷை காணாமல் பல இடங்களில் தேடிய அவரது குடும்பத்தினா், அப்பகுதியில் கிணற்றின் வழியே சென்றதை அறிந்து தோ்வாய் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனா்.
பின் தீயணைப்பு துறை அதிகாரி முத்து தலைமையில் தீயணைப்பு துறையினா், கிணற்றில் இறங்கி தேடி, மாணவன் லத்தீஷின் உடலை கைப்பற்றினா். பின் பாதிரிவேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









