தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் நலம் பெற வேண்டி திருவாரூா், நன்னிலம் பகுதி கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரோனா தொற்று அறிகுறிகளுடன் சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சா் ஆா். காமராஜ், நலம் பெற வேண்டி திருவாரூா் குரு தட்சிணாமூா்த்தி மடத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதேபோல, நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதசுவாமி கோயிலில், கூத்தனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் இராம குணசேகரன், நன்னிலம் ஒன்றியக் குழு தலைவா் விஜயலட்சுமி குணசேகரன், மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் கே.கோபால் உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டு வழிபாடு மற்றும் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








