தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

நத்தக்காடையூர் அருகே லாரி-சரக்கு வேன் மோதல்

காங்கயம் அருகே, நத்தக்காடையூர் பகுதியில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News image

காங்கயம் அருகே, நத்தக்காடையூர் பகுதியில் லாரியும், சரக்கு வேனும் மோதிக் கொண்ட விபத்தில் உருக்குலைந்து காணப்படும் சரக்கு வேன்.

Updated On :7 ஜனவரி 2021, 4:31 pm IST

காங்கயம்: காங்கயம் அருகே, நத்தக்காடையூர் பகுதியில் லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் இருந்து முத்தூருக்கு தக்காளிப் பழங்களை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. வேனை, காங்கயம் அருகே சாவடி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (28) என்பவர் ஓட்டிக் கொண்டு சென்றார். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில், அர்ச்சுனாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே முத்தூரில் இருந்து நத்தக்காடையூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வேனின் முன்பகுதி லாரியின் முன் பகுதிக்குள் புகுந்து, உள்ளே சிக்கி நின்றது. லாரிக்கு அடியில், வேனுக்குள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் குணசேகரனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை.

இதனையடுத்து, அப் பகுதியில் இருந்த தனியாருக்குச் சொந்தமான கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி, குணசேகரனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குணசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் வேனின் முன்பகுதி முழுக்க சேதமடைந்தது. லாரியின் முன்பக்கமும் சேதமடைந்தது. லாரி ஓட்டுநர் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.