மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

விற்பனையில் ஆல்ட்டோவை முந்தியது டிஸைர்

மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வரும் ஆல்ட்டோ கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் கார்கள் என்ற பெருமையை அதே நிறுவனத்தின் டிஸைர் ரகக் கார்கள் பெற்றுள்ளன.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 12:49 am IST


மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்து வரும் ஆல்ட்டோ கார்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டில் மிக அதிகமாக விற்பனையாகும் கார்கள் என்ற பெருமையை அதே நிறுவனத்தின் டிஸைர் ரகக் கார்கள் பெற்றுள்ளன.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஜூலை மாத வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதத்தைப் பொருத்தவரை, மாருதி சுஸுகி நிறுவனத்தின் டிஸைர் ரகத்தைச் சேர்ந்த 25,647 கார்கள் விற்பனையாகி, பயணிகள் வாகன விற்பனையில் முதலிடத்தைப் பெற்றன.
முந்தைய 2017-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 14,703-ஆக இருந்தது. மேலும், விற்பனை வரிசையில் முந்தைய ஆண்டின் ஜூலை மாதத்தில் டிஸைர் கார்கள் 5-ஆவது இடத்தில் இருந்தன. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த ஆல்ட்டோ கார்கள், இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 23,371 மட்டுமே விற்பனையாகி இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டன. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான ஆல்ட்டோ கார்களின் எண்ணிக்கையான 26,009-உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.