மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் புரமோஷன் செல்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேலும் ஊக்குவிப்பதற்காக எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் புரமோஷன் செல் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2019, 10:18 pm

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேலும் ஊக்குவிப்பதற்காக எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் புரமோஷன் செல் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை விளங்குகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக தற்போது 1,47,390.08 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி வணிகம் நடைபெற்று வருகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இத்துறை தொழில் நிறுவனங்கள் சார்பாக 2017-2018 ஆண்டில் செய்யப்பட்ட ஏற்றுமதி 48.56 சதவீதமாகும்.  

அதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உலக பொருளாதாரத்திற்கு தங்களுடைய பங்களிப்பை அளிக்கச் செய்ய அவர்களுடைய பொருட்களை ஏற்றுமதி செய்யவும்,  ஏற்கனவே செய்து வரும் ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் செல் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் மூலம் 2020-ஆம் ஆண்டில் இந்த தொழில் நிறுவனங்கள் மூலம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது. ஏற்றுமதிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தயார்படுத்துவது. ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக இத்தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்தி ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்டவை முக்கிய நோக்கமாக கொண்டு எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் செல் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்ய நினைக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகள், மானியங்களை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.