தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

10 கோடி பயனர்களைக் கொண்டுள்ள ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயனர்களாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

News image

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

Updated On :13 பிப்ரவரி 2021, 4:55 pm IST

உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயனர்களாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நெயில் சைபார்ட், ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் குறித்த பகுப்பாய்வுகளை நடத்தி வருகிறது.

அதன் ஆய்வின் படி, உலகம் முழுவதும் 10 கோடி மக்கள் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்திற்குள் இந்த 10 கோடி பயனர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது. இதில் 30 கோடி பயனர்கள் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டுமே கிடைத்துள்ளனர்.

இது கடந்த 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கிடைத்த பயனர்களை விட 2020-ல் கிடைத்த பயனர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐ-போன், ஐ-பாட், மேக் ஆகியவற்றிற்கு பிறகு ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சந்தையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் ஐ-போன் பயன்படுத்துபவர்களில் 35 சதவிகிதத்தினர் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சையும் சேர்த்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஸ்மார்ட் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்துபவர்களில் 55 சதவிகிதத்தினர் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயனர்களாகவே உள்ளதாக ஸ்டாடிஸ்டா ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் 13.9 சதவிகித பயனர்களைக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.