பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிற ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ரெட்மியின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்

Published On :

புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிற ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

32-இன்ச் மற்றும் 43-இன்ச் அளவில் ‘ரெட்மி’ பெயரில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஸியோமி இந்தியாவின் அதிகாரி ஈஸ்வர் நீலகண்டன் ,’ முன் எப்போதும் இல்லாத தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உறுதியாக இந்த டிவியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் தரத்தை உணர்வார்கள். முக்கியமாக திரையின் தரம் வியப்பில் ஆழ்த்தும் ‘ எனத் தெரிவித்திருக்கிறார்.

’எம்ஐ-உடன் தீபாவளி’ என்கிற அறிவிப்போடு அமெசான் விற்பனைத் தளத்தில் அடுத்த மாதம் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகமாகிறது.

32- இன்ச் டிவி ரூ.15,999 ஆகவும் 43-இன்ச் டிவி ரூ.25,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி

* 16 மில்லியன் கலர்ஸ்

* விவித் பிக்சர் இஞ்ஜின்

* 20 வாட்ஸ் ஸ்பீக்கர்

* எச்டிஎம்ஐ , 3.5 எம் எம் ஜாக் , யூஎஸ்பி , எதெர்நெட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.