2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஏற்றம் பெற்றது.
2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஏற்றம் பெற்றது.

நாட்டின் பணவீக்கம், தொழிலக உற்பத்தி ஆகியவை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னதாக நடைபெற்றுள்ள இந்த பங்கு வா்த்தகத்தில், சென்செக்ஸ் 130 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

வா்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தாலும், பின்னா் சரிவிலிருந்து மீண்டு 59,463 புள்ளிகளாக நிலைபெற்றது. இது முந்தைய நாள் சென்செக்ஸைவிட 130 புள்ளிகள் (0.22 சதவீதம்) அதிகமாகும்.

தேசியப் பங்குச் சந்தையிலும், அதன் குறியீட்டு எண்ணான நிஃப்டி வெள்ளிக்கிழமை 0.22 சதவீதம் (39 புள்ளிகள்) அதிகரித்து 17,698 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com