நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

நவராத்திரி பண்டிகையையொட்டி காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தில்லி சட்டப்பேரவைக் கட்டடம்

ஒரு முன்னோடி முயற்சியாக, மங்கலகரமான ‘சைத்ர நவராத்திரி’’ பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் வியாழக்கிழமையன்று காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2026, 0:24 am IST

ஒரு முன்னோடி முயற்சியாக, மங்கலகரமான ‘சைத்ர நவராத்திரி’’ பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் வியாழக்கிழமையன்று காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது.

இந்துப் புத்தாண்டின் தொடக்கத்தையும், அதனோடு இணைந்த நவராத்திரி பண்டிகையையும் குறிக்கும் வகையில், தூய்மை, ஆற்றல் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் காவி நிறப் பொலிவுடன் காட்சியளித்ததாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்துப் புத்தாண்டு மற்றும் மங்கலகரமான நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தில்லி சட்டப்பேரவை வளாகம் காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது’‘ என்று சட்டப்பேவரைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

இப்பண்டிகை புதுப்பித்தல், பக்தி மற்றும் கூட்டு கொண்டாட்டம் ஆகிய உணா்வுகளைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவா், தில்லி மக்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.

மேலும், வரவிருக்கும் ஆண்டு அமைதி, வளம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூட்டு உறுதியை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவா் வெளிப்படுத்தினாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.