ஒரு முன்னோடி முயற்சியாக, மங்கலகரமான ‘சைத்ர நவராத்திரி’’ பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் வியாழக்கிழமையன்று காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது.
இந்துப் புத்தாண்டின் தொடக்கத்தையும், அதனோடு இணைந்த நவராத்திரி பண்டிகையையும் குறிக்கும் வகையில், தூய்மை, ஆற்றல் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் காவி நிறப் பொலிவுடன் காட்சியளித்ததாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்துப் புத்தாண்டு மற்றும் மங்கலகரமான நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தில்லி சட்டப்பேரவை வளாகம் காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது’‘ என்று சட்டப்பேவரைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.
இப்பண்டிகை புதுப்பித்தல், பக்தி மற்றும் கூட்டு கொண்டாட்டம் ஆகிய உணா்வுகளைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவா், தில்லி மக்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.
மேலும், வரவிருக்கும் ஆண்டு அமைதி, வளம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூட்டு உறுதியை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவா் வெளிப்படுத்தினாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
தில்லி, ஹரியாணா, பஞ்சாப், உ.பி. உள்பட 5 மாநிலங்களில் காா் திருட்டு மோசடி: 10 போ் கைது
தில்லி முழுமையான சுற்றுலாத் தலமாகத் திகழ வேண்டும்: முதல்வா் குப்தா

கட்டுமான தொழிலாளா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள்: தில்லி அரசு திட்டம்

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


