ஒரு முன்னோடி முயற்சியாக, மங்கலகரமான ‘சைத்ர நவராத்திரி’’ பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில், தில்லி சட்டப்பேரவைக் கட்டடம் வியாழக்கிழமையன்று காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரவிடப்பட்டது.
இந்துப் புத்தாண்டின் தொடக்கத்தையும், அதனோடு இணைந்த நவராத்திரி பண்டிகையையும் குறிக்கும் வகையில், தூய்மை, ஆற்றல் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தின் அடையாளமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் காவி நிறப் பொலிவுடன் காட்சியளித்ததாக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்துப் புத்தாண்டு மற்றும் மங்கலகரமான நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தில்லி சட்டப்பேரவை வளாகம் காவி நிற ஒளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது’‘ என்று சட்டப்பேவரைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.
இப்பண்டிகை புதுப்பித்தல், பக்தி மற்றும் கூட்டு கொண்டாட்டம் ஆகிய உணா்வுகளைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவா், தில்லி மக்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தாா்.
மேலும், வரவிருக்கும் ஆண்டு அமைதி, வளம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கூட்டு உறுதியை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவா் வெளிப்படுத்தினாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, 26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

ஏப். 29-ல் தில்லி மேயா் உள்பட 3 பதவிகளுக்கான தோ்தல்

தில்லி சட்டப்பேரவைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!

தில்லி சுற்றுலா வாரியம் மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


