ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தை: 57,800 புள்ளிகளில் சென்செக்ஸ்

இந்த வார வர்த்தகத்தில் இரண்டாவது நாளான இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2022, 10:15 am

DIN

இந்த வார வர்த்தகத்தில் இரண்டாவது நாளான இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று (பிப்.7) 57,621.19 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,799.67 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ்  187.39 புள்ளிகள் உயர்ந்து 57808.58  புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,213.60 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,279.85 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 53.15 புள்ளிகள் அதிகரித்து 17,266.75  புள்ளிகளில் நிறைவடைந்தது.

கடந்த வாரத் தொடக்கத்தில் 60,000 வரை நெருங்கிச் சென்ற சென்செக்ஸ் இந்த வார வர்த்தகத்தில் சிறிய எழுச்சியையே அடைந்துள்ளது.

சென்செக்ஸ் பட்டியலில்  பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வில் முடிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.